சென்னை : இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ஒளிரும் தமிழ்நாடு என்ற மாநாட்டை காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியைத் தொடர்ந்து மேம்படுத்தவும், தொழில் துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்திடவும், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் நடைபெறும், ஒளிரும் தமிழ்நாடு என்ற காணொலி மாநாட்டினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்து உரையாற்றினார். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்த்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.