விவசாயி டிராக்டரை எரித்த தெலுங்கு தேசம் கட்சியினர்

*ஸ்ரீகாளஹஸ்தி எம்எல்ஏ குற்றச்சாட்டு

ஸ்ரீகாளஹஸ்தி : ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி விவசாயி டிராக்டரை தீ வைத்து எரித்ததாக தெலுங்கு தேசம் கட்சியினர் மீது எம்எல்ஏ மதுசூதன் குற்றம்சாட்டினார்.திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி மண்டல்ம் ஊரந்தூர் கிராமத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் விவசாயி திலீப். இவரது டிராக்டர் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்த டிராக்டரை பார்வையிட்டு உரிமையாளர் திலீப்புக்கு ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து எம்எல்ஏ மதுசூதன் பேசுகையில், ‘திட்டமிட்டு எங்கள் கட்சியை சேர்ந்த திலீப்புக்கு சொந்தமான டிராக்டரை தெலுங்கு தேசம் கட்சியினர் எரித்துள்ளனர். தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் இன்று விவசாயிகளின் டிராக்டரை எரித்து இன்பம் காணுகின்றனர். இதுகுறித்து நாங்கள் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்க உள்ளோம். உரிய விசாரணை நடத்தி, இந்த விவசாயிக்கு நீதி வழங்க வேண்டும்’ என்றார்.

The post விவசாயி டிராக்டரை எரித்த தெலுங்கு தேசம் கட்சியினர் appeared first on Dinakaran.

Related Stories: