புழல் சிறை கைதி மரணம்

புழல்:  சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்  (74). இவர், பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு, கடந்த 2014ம் ஆண்டு முதல், புழல் சிறையில் தண்டனை கைதியாக இருந்து வந்தார். வயது மூப்பு மற்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் அவதிப்பட்ட இவரை கடந்த 22ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 5 மணியளவில் குணசேகரன் இறந்தார்.

Related Stories: