வாஷிங்டன்: ‘‘உயிர் பலி வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் வந்தது என்பது உறுதி. இந்த பிரச்னையை அமெரிக்கா எளிதில் விடாது,’’ என்று அதிபர் டிரம்ப் ஆவேசமாக கூறியுள்ளார். அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில், ஆப்பிரிக்கா - அமெரிக்க தலைவர்கள் பங்கேற்ற மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், ‘‘கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் உருவானது என்பது உறுதி. அமெரிக்காவும் சீனாவும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அந்த மை கூட இன்னும் காயவில்லை.