திருவனந்தபுரம்: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா, கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக இறங்கிய நிலையில், சுமார் 3 மாதங்களுக்கு பிறகு, தனது குடும்பத்தினரை சந்தித்து மகிழ்ந்தார். சைலஜா டீச்சர் என்று அன்போடு அழைக்கப்படும் சுகாதாரத் துறை அமைச்சரின் அயராத பணி காரணமாக, கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் திறமையாக செயல்படுத்தப்பட்டு, அங்கு நோய் இல்லாத மாநிலமாக மாற்றி உள்ளார். கடந்த 3 மாதமாக அரசு அலுவலகத்திலேயே முகாமிட்டு, சுகாதாரத்துறை ஊழியர்களை முடுக்கிவிட்டு, இரவு பகல் பாராது, கொரோனா தடுப்பு பணியில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். சுமார் 3 மாத காலம் அவரது அயராது உழைப்பு, மாநிலம் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு, பல்வேறு தளர்வுகளை பெற்று மக்கள் சுதந்திரமாக நடமாட தொடங்கி உள்ளனர்.