சென்னை:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: ஏல ஒப்பந்த புள்ளி அழைப்பில் பணிகள் விவரங்களை ஏன் வெளியிடவில்லை என முதலமைச்சர் விளக்க வேண்டும். காவிரி வடிகால் வட்டத்தில் 35 பணிகளை மேற்கொள்ள குறுகிய கால ஒப்பந்தப் புள்ளி ஏல அழைப்பு வெளியிட்டுள்ளது. இதில் பணிகள் விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் 35 பணிகளையும் ஒருங்கிணைத்து, அந்தப் பணிகளின் மதிப்பீட்டுத் தொகையாக ரூபாய் 65 கோடி எனக் குறிக்கப்பட்டுள்ளது. 35 பணிகளின் விவரப் பட்டியலையும், ஒவ்வொரு பணிக்கும் ஒதுக்கப்படும் மதிப்பீட்டு தொகையும் பட்டியலாக வெளியிடாமல் கீழ் காவிரி வடிகால் வட்டம் மறைப்பது ஏன்?