ரோம் : மனித செல்களில் உள்ள கொரோனா வைரஸை அழிக்கக் கூடிய உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டறிந்துள்ளதாக இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதையும் புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், வைரஸைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசியைக் கண்டறியும் ஆய்வு பல்வேறு நாடுகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக இத்தாலி அறிவித்துள்ளது. ரோம் நகரில் உள்ள ஸ்பாலன்சானி என்ற தொற்று நோய்த் தடுப்பு மருத்துவமனை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.டக்கீஸ் என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஸ்பாலன்சானி மருத்துவமனையில் சில மாதங்களாக கொரோனா நோய் தடுப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது.