நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் புதியதாக தேர்வான பெண் காவலர்களுக்கு நாளை சான்றிதழ் சரிபார்ப்புடன் பயிற்சி தொடங்குகிறது. இதற்காக பாளை ஆயுதப்படை மைதானம் மற்றும் வளாக கட்டிடங்களில் இன்று கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. 2019ம் ஆண்டில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2ம் நிலை காவலர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, அடிப்படை பயிற்சிக்கு தகுதி பெற்ற நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த பெண் காவலர்கள் நாளை காலை 8 மணிக்கு நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் அனைத்து அசல் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை,