ஆவடி அருகே ரூ.1.5 கோடி தங்க நகைகள் கொள்ளை: 2 பேர் கைது

திருவள்ளூர்: ஆவடி அருகே நகைக்கடையில் புகுந்து துப்பாக்கியை காட்டி ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 15-ல் முத்தாபுதுபேட்டையில் கிருஷ்ணா ஜுவல்லரி என்ற நகைக்கடையில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர். நகைக் கடைக்கு வந்த 4 பேர், துப்பாக்கி முனையில் மிரட்டி உரிமையாளர் பிரகாஷின் கை, கால்களை கட்டி போட்டுள்ளனர். பிரகாஷை கட்டிப் போட்டு ரூ.1.15 கோடி தங்க நகைகள், ரூ.5 லட்சம் பணம், ஐபோன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

The post ஆவடி அருகே ரூ.1.5 கோடி தங்க நகைகள் கொள்ளை: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: