கோடநாடு வழக்கு விசாரணை ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

சென்னை : கோடநாடு வழக்கு விசாரணை ஜூன் 21-க்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய வழக்கு விசாரணைக்கு வாளையார் மனோஜ் மட்டுமே ஆஜரானார். சிபிசிஐடி தரப்பில் ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசாரும், அரசு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோரும் ஆஜராகினர்.கோடநாடு பங்களாவில் ஆய்வு செய்த நிபுணர் குழுவின் அறிக்கை நகலை-தர குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு கேட்டனர். அறிக்கையின் நகலை தர அரசு தரப்பு அவகாசம் கேட்ட நிலையில் வழக்கு விசாரணை ஜூன் 21-க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post கோடநாடு வழக்கு விசாரணை ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: