சத்தியமங்கலம்: பண்ணாரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கரடி பலியானது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்- கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சாலையில் வாகன போக்குவரத்து குறைந்துள்ளது.