கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம் துருவகெரே தொகுதி பாஜ எம்எல்ஏ.வாக இருப்பவர் ஜெயராம். இவர் ஊரடங்கு உத்தரவையும் மீறி, தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இவரது பிறந்தநாளின் போது பெரியளவில் கேக் வெட்டப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். பிறந்தநாளுக்கு வந்த விருந்தினர்களுக்கு அவர் தடபுடலாக பிரியாணி விருந்து அளித்தார். ஊரடங்கின்போது 5 பேருக்கு மேல் கூட்டம் கூடக் கூடாது என்ற விதி உள்ளது. திருமணம், இறந்தவர் வீடுகளில் 20 பேருக்கு மேல் கூட்டம் கூடக்கூடாது என்று சட்டமும் உள்ளது.