ஊரடங்கை மீறியதாக இதுவரை 1.40 லட்சம் வழக்குகள் பதிவு 1.19 லட்சம் வாகனங்கள் பறிமுதல்...தமிழக காவல்துறை தகவல்

சென்னை: இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,447 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர்களின்  எண்ணிக்கை 239 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் இறங்கி உள்ளது. ஏற்கனவே 2 முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர்  மோடி, கடந்த 24ம் இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது, இன்று(மார்ச் 24) முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவித்தார்.

வரும் 14ம் தேதியோடு இந்த ஊரடங்கு முடியும் நிலையில், வைரசின் பரவல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால், முழு ஊடரங்கை நீட்டிக்க வேண்டுமென மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை  விடுத்துள்ளன. இதற்கு ஒருபடி மேலே சென்றுள்ள ஒடிசா அரசு வரும் 30ம் தேதி வரை தனது மாநிலத்தில் ஊரடங்கை நீட்டித்து தானாகவே உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவு காரணமாக நாட்டு மக்கள் வீட்டில்  முடங்கியுள்ளனர். அத்தியவாசிய பொருட்கள் விற்பனையாகும் பால், காய்கறி, இறைச்சி, மீன், மருத்தகம் உள்ளிட்ட கடைகளுகள் கட்டுப்பாடுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பொதுமக்கள் வெளியை வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை  மீறியதாக இதுவரை 1.40 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1.19 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறயவர்களிடமிருந்து ரூ.53.72  லட்சம்அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: