கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவரை கிராம மக்கள் ஊருக்குள் அனுமதிக்காததால் அவர் தன்னை தானே சுய தனிமைப்படுத்தி கொண்டு படகில் வசித்து வருகிறார். மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த நிரஞ்சன் ஹோல்டர் என்ற முதியவருக்கு 4 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. கொரோனா பீதியால் கிராம மக்கள் முதியவரை ஊருக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இதனால் உள்ளூர் மருத்துவரின் பரிந்துரையை ஏற்று முதியவர் ஊர் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு பகுதியில் உள்ள படகில் தம்மை தாமே தனிமைப்படுத்தி கொண்டு வசித்து வருகிறார்.