சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்களுக்கு ஒருமாத கால சிறப்பு ஊதியத்தை வழங்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். மருத்துவ பணியாளருக்கான ரூ.50 லட்சம் காப்பீடு திட்டத்தை அவசர ஊர்தி ஊழியர்களுக்கு விரிவுபடுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.