வேலூர்: வேலூர் அடுத்த காட்பாடி பர்னீஸ்புரத்தைச் சேர்ந்த பாதிரியார் லண்டன் சென்று கடந்த 17ம் தேதி வீடு திரும்பியுள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் சுமார் 600 பேர் வரை வெளிநாட்டிற்கு சென்று திரும்பி உள்ளனர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பர்னீஸ்புரத்தில் உள்ள பாதிரியார் லண்டன் சென்றுவிட்டு கடந்த 17ம் தேதி காட்பாடி திரும்பி வந்துள்ளார். அவரை மாவட்ட நிர்வாகத்தினர் தனிமைப்படுத்தி கண்காணித்தனர். அவருக்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதால் கடந்த 24ம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இந்நிலையில் நேற்று காலை அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவியும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.