மணப்பாறை: மணப்பாறையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் அபாயம் குறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாடம் நடத்தினார். கொரோனாவின் வீரியத்தை மக்கள் சரிவர புரிந்து கொள்ளவில்லை. வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தியுள்ளது. அதையும் மீறி அவர்கள், வெளியில் சுற்றி வருவதாக குற்றச்சாட்டுள்ளது. மேலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு தரப்பு எச்சரிக்கை விடுத்துடுள்ளது.