டெல்லி : கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரயில்வே பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றித் தர இந்திய ரயில்வே முன்வந்துள்ளது.இந்திய ரயில்வே வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி வரை கொரோனா பரவலை தடுப்பதற்காக, அனைத்து பயணிகள் ரயிலையும் ரத்து செய்துள்ளது.இந்நிலையில், நேற்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ரயில்வே உயரதிகாரிகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் ரயில்வே துறையால் கொரோனா வைரஸை விரட்ட என்ன என்ன உதவிகள் செய்ய முடியும் என விவாதிக்கப்பட்டது .வெண்டிலேட்டர்ஸ் தயாரிப்பது, தற்காலிக படுக்கைகள், ட்ராலிகள் தயாரிப்பது உள்ளிட்ட விஷயங்கள் பரிசீலிக்கப்பட்டது.