சென்னை: அச்சிறுப்பாக்கத்தில், அரசு மருத்துவமனை அமரர் ஊர்தி, நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி ஆகியவை உள்ளன. இதில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறப்பவர்களின் உடல்களை, அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து சடலத்தை எடுத்து கொண்டு, அமரர் ஊர்த்தி மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் சென்றது. அங்கு சடலத்தை இறக்கிவிட்டு, மீண்டும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வாகனத்தை டிரைவர் இயக்கினார்.