சென்னை: தமிழகத்தில் போராட்டங்களை நடத்த அனுமதிக்கக்கூடாது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 21 வரை போராட்டங்கள் நடத்த அனுமதிக்கக்கூடாது எனவும் கூறியுள்ளது. மேலும் வழக்கு விசாரணை ஏப்ரல் 21-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் அனைவரும் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற உத்தரவை பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு உத்தரவிட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியதை மக்கள் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.