சென்னை: அஞ்சான் பாத் லாப்ஸ் & அலர்ஜி டெஸ்டிங் சென்டரின் சேகரிப்பு மையங்கள் சென்னை கொளத்தூர், அண்ணாநகர், அரும்பாக்கம், வேளச்சேரி, ஜமீன் பல்லாவரம், கீழ்ப்பாக்கம், ஆழ்வார்பேட்டை, தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், வடபழனி, தாம்பரம், மண்ணடி, கல்பாக்கம், பூந்தமல்லி, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் உள்ளன. இங்கு, அனைத்து வகை ஒவ்வாமைக்கான (அலர்ஜி) பரிசோதனை 50 சதவீதத்திற்கு அதிகமான தள்ளுபடியுடன் இன்று (8ம் தேதி) மற்றும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து டாக்டர் சி.ஆச்சா ஆறுமுகசாமி கூறுகையில், ‘‘ஒரே ஒரு ரத்த பரிசோதனை மூலம் அலர்ஜியை எளிதாக கண்டறியலாம். குறிப்பிட்ட உணவு பொருட்களை தவிர்த்தோ அல்லது மருந்துகளின் உதவியாலோ சிகிச்சையளிக்க முடியும்.