சம்பால்: ‘‘குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்ப அரசே ஆட்களை அனுப்புகிறது’’ என்று உத்தர பிரதேசத்தின் முன்னாள் ஆளுநர் அஜிஸ் குரேஷி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள்தொகை பதிவு (என்பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த உபி. முன்னாள் ஆளுநர் அஜிஸ் குரேஷி கூறியதாவது: முஸ்லிம்களை பிரிக்கும் பாஜ, ஆர்எஸ்எஸ்.சின் சதித் திட்டமே குடியுரிமை திருத்தச் சட்டமாகும். நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இருக்கும் எம்பி.க்களின் எண்ணிகையை பயன்படுத்தி பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அரசியலமைப்பின் நற்பண்புகளை கொன்று புதைத்து இதனை சட்டமாக்கி உள்ளனர்.