புதுடெல்லி: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. பிரதமர் நரேந்திர மோடி, மன் கீ பாத் என்னும் மனதின் குரல் நிகழ்ச்சியில் நேற்று பேசுகையில், ஜம்மு காஷ்மீர் அணிக்கு வாழ்த்துகள் கூறினார்.
அவர் பேசுகையில், ‘ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணி முதல் முறையாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளது. அந்த அணிக்கு பாராட்டுகள். போட்டிகளில் வெற்றி பெறும் மனப்பான்மையுடன் அந்த அணி வீரர்கள் எதிர்காலத்திலும் ஆடுவர் என நம்புகிறேன்’ என்றார்.
