வேலூர்: குடியாத்தம் சாத்கர் மலையில் பதுக்கி வைத்திருந்த 4,500 லிட்டர் எரிசாராய ஊறலை அழித்து மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து வேலூர் எஸ்பி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் குடியாத்தம் மதுவிலக்கு போலீசார் நேற்று சாத்கர் மலைப்பகுதியில் உள்ள டங்கா பள்ளம், மாமரத்து பள்ளம் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.