வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் அளித்த பேட்டி:
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதிமுக, திமுகவுடன் அமமுக போட்டி போட முடியாது. எல்லாவகையிலும் திமுக தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் குரல் கொடுத்து வருகிறது. அந்த வகையில் யார் நல்லது செய்தாலும் பாராட்டுவேன். மத்திய அரசு செய்யும் அனைத்து காரியங்களும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கும் எதிராக உள்ளது. மத்திய அரசு ஒரு கையில் மிட்டாயும், ஒரு கையில் விஷத்தையும் கொடுக்கிறது. ஆளும் அதிமுகவின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் மத்திய அரசை எதிர்க்க முடியாது. இப்போது அதிமுக உருமாறி உள்ளது.