ஊட்டி: கோடை சீசனுக்காக தாவரவியல் பூங்கா தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், பராமரிப்பு பணிக்காக பெரிய புல்மைதானம் மூடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் மற்றும் ரோஜா பூங்கா போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். கோடை சீசனுக்காக, 35 ஆயிரம் தொட்டிகளில் நாற்று நடவு செய்யப்பட்டு தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பூங்காவில் உள்ள அனைத்து புல் மைதானங்களும் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.