பைக்கில் சென்றபோது காதலி தீக்குளிப்பு காதலன் சாவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஆகாஷ் (24). பூம்புகார் அரசு கல்லூரியில் பிகாம் மூன்றாமாண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த நாகப்பன் மகள் சிந்துஜா(22). மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் பிஏ இரண்டாமாண்டு படித்து வருகிறார். இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீப காலமாக ஆகாஷ் வேறு ஒரு பெண்ணுடனும் பழகியதால் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 9ம்தேதி ஆகாஷ், சிந்துஜா ஆகியோர் பூம்புகார் கடற்கரைக்கு சென்று விட்டு மயிலாடுதுறைக்கு பைக்கில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண் தொடர்பான பிரச்னையில் சிந்துஜா பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குச்சியை கொளுத்தி பற்ற வைத்துக்கொண்டார். சிந்துஜா மீது எரிந்த தீ, ஆகாஷ் மீதும் பரவியது. படுகாயமடைந்த இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ஆகாஷ் இறந்தார். சிந்துஜா மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

The post பைக்கில் சென்றபோது காதலி தீக்குளிப்பு காதலன் சாவு appeared first on Dinakaran.

Related Stories: