இதுதொடர்பாக கரூர் டவுன் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில், ஆண்டாங்கோயில் புதூர் பகுதிக்குட்பட்ட விவசாய நிலத்தில் உள்ள ஒரு கிணற்றோரம் 3 சிறுவர்களின் செருப்புகள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மூவரும் வெயிலுக்காக கிணற்றில் டைவ் அடித்து குளித்தபோது மூழ்கியிருக்கலாம் என தெரிய வந்தது. உடனடியாக போலீசாரும், கரூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் வந்து 40 அடி தண்ணீர் உள்ள கிணற்றில் இறங்கி தேடினர். இதில் நள்ளிரவு 12 மணியளவில், மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் கரூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி: கரூர் அருகே சோகம் appeared first on Dinakaran.