முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: மேலாண் இயக்குநர் தகவல்

சென்னை: முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களான வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
17ம் தேதி வெள்ளிக் கிழமை 18ம் தேதி சனிக்கிழமை மற்றும் 19ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முகூர்த்தம் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் 17ம் தேதி வெள்ளிக் கிழமை அன்று 555 பேருந்துகளும் 18ம் தேதி சனிக்கிழமை அன்று 645 பேருந்துகளும், 19ம் தேதி ஞாயிற்றுக் கிழமை 280 பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர்.

பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வரும் 17, 18, 19ம் தேதிகளில் 195 பேருந்துகளும் இயக்க ப்படும்.எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக வரும் வெள்ளிக் கிழமை அன்று 555 பேருந்துகளும் சனிக்கிழமை அன்று 645 பேருந்துகளும், ஞாயிற்றுக் கிழமை 280 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக் கிழமை அன்று 65 பேருந்துகளும் சனிக்கிழமை அன்று 65 பேருந்துகளும் மற்றும் ஞாயிற்றுக் கிழமை அன்று 65 பேருந்துகளும், மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

வெள்ளிக் கிழமை அன்று 12,096 பயணிகளும் சனிக்கிழமை அன்று 7,494 பயணிகளும் ஞாயிற்றுக் கிழமை 10556 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in < //www.tnstc.in > மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: மேலாண் இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: