அங்கு இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் ராஜா, மாநில செயலாளர் முத்தரசன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று காலை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திருப்பூர் எம்பி சுப்பராயன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட நிர்வாகம் சார்பில் திருவாரூர் டிஆர்ஓ சண்முகநாதன், எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து காலை 11 மணியளவில் செல்வராஜ் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
The post 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நாகை எம்பி உடல் அடக்கம் appeared first on Dinakaran.