மதுரை: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த மதிவாணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:பொதுமக்களின் நலன் சார்ந்த பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணியாற்ற வேண்டியது அரசு ஊழியர்களின் கடமை. ஆனால், பெரும்பாலான அரசு ஊழியர்கள் நேரத்தை முறையாக பின்பற்றுவதில்லை. அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக பணிக்கு வரவேண்டும் என்பதற்காக, மத்திய அரசு அலுவலகங்களில் பயோ-மெட்ரிக் வருகை பதிவேடு முறை கொண்டு வரப்பட்டது. இந்த நடைமுறை தமிழகத்திலுள்ள 141 மத்திய அரசு துறை சார்ந்த நிறுவன மற்றும் அமைப்புகளில் அமலில் உள்ளது.இந்த நடைமுறையால் தாமத வருகை தவிர்க்கப்படும். இந்த நடைமுறை சமீபத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அமல்படுத்தப்பட்டது.