புதுடெல்லி: நீலகிரியில் உள்ள யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள கட்டிடங்கள், ரிசார்ட்டுகள் ஆகியவற்றை கண்டறிந்து அகற்றுவது தொடர்பான குழுவில் இடம் பெறுபவர்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மேலும் ஒரு நாள் தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் யானை வழித்தட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை நீக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் மொத்தம் 39 ரிசார்ட்டுகள் இடிக்கப்பட்டன. இந்த நிலையில் சீலிடப்பட்ட கட்டிடங்கள் மீண்டும் இயங்குவதாக உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் யானை ராஜேந்திரன் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.