புதுடெல்லி: தீவிரவாதம் மற்றும் நக்சல் தீவிரவாதத்துக்கு எதிராக போராடிய பாதுகாப்பு படை வீரர்களின் குழந்தைகளுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதுவதில் சில சலுகைகளை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பின் அதில் பலியான பாதுகாப்பு படையினரின் குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ கடந்தாண்டு சில விதிமுறைகளை தளர்வு செய்திருந்தது. அதை இந்தாண்டும் தொடர சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. தீவிரவாதம் மற்றும் நக்சல் தீவிரவாதத்துக்கு எதிராக போராடும் ராணுவ வீரர்களின் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.