மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்லாந்தின் பெலிண்டா பென்சிக், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்றுக்கு முன்னேறினர்.
மெல்போர்னில் மகளிர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன. அதில் ஸ்விட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் 7-5, 7-5 என்ற நேர் செட்களில் லாத்வியாவின் ஜெலனா ஆஸ்டாபென்கோவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்றுக்கு முன்னேறினார். செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் லாரா செய்க்முன்டை வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தார். அமெரிக்காவின் சிசி பெல்லிஸ் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் செக்குடியரசின் கரோலினா முசோவாவை வீழ்த்தி 3வது சுற்றில் விளையாட தகுதிப் பெற்றார்.