சென்னை: அரசின் ஒப்புதல் இல்லாமல் தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது சட்ட விரோதம் என்று திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வது தொடர்பாக கொண்டு வரப்பட்ட மசோதா மீது காஞ்சிபுரம் எழிலரசன் (திமுக) பேசியது: தமிழ்நாடு இசை பல்கலை மூலம் தனியார் கல்லூரிகளுக்கு அரசின் ஒப்புதல் இல்லாமல் அனுமதி அளித்தது சட்ட விரோதம். எந்த அடிப்படையில் அந்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த கல்லூரிகளுக்கு அமைச்சரின் ஒத்திசைவு உடன் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சட்ட விரோத அனுமதிக்கு திமுக துணை போக முடியாது.