சென்னை:திருவள்ளூர் மாவட்டத்தில் 230 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. அனைத்து முடிவுகளும் நேற்று பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி 178 இடங்களையும், அதிமுக கூட்டணி 91 இடங்களையும், சுயேட்சைகள் 31 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. இதில், மீஞ்சூர், சோழவரம், புழல், திருவள்ளூர், பூந்தமல்லி ஆகிய ஒன்றியங்களில், குழு தலைவர் பதவிகளும் திமுக வசம் வந்துள்ளது.