(18.12.2025 முதல் 24.12.2025 வரை)
சாதகங்கள்: ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருந்த குரு, ராசிக்கு 2-ஆம் இடமாகிய தன குடும்ப ஸ்தானத்தில் வந்து அமர்வது பொருளாதார ரீதியாக நன்மைகளைக் காட்டுகிறது. இதுவரை தாமதமான காரியங்கள் வேகம் எடுக்கும். விலகிச் சென்ற உறவுகள் உங்களைத் தேடி வரும். உத்தியோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நினைத்த லாபம் கிடைக்கும். வாடகைக் கட்டடத்தில் இருந்து சொந்த கட்டடத்திற்கு மாறும் வாய்ப்புண்டு. ராகு பலமாக இருப்பதால், எதிர்பாரா பண வரவுகள் உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். புதிய தொழில்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
கவனம் தேவை: அஷ்டமத்தில் சுக்கிரன் அமர்வதால், பெண்களால் அவப் பெயர் உண்டாகும். முன்கோபம் அதிகரிக்கும். அஷ்டமத்தில் சூரியன் இருப்பதால், சமூக வலைத்தளங்களைத் தவறாகப் பயன்படுத்தி மாட்டிக் கொள்ளக்கூடாது. அவசரப்பட்டு சில காரியங்களைச் செய்து இழப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். நான்காம் இடம் பலவீனமாக இருக்கிறது. வண்டி வாகனங்களில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 19.12.2025 இரவு 10.52 முதல் 22.12.2025 காலை 10.07 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு விளக்கு போடுங்கள். வெற்றி கிடைக்கும்.
