(18.12.2025 முதல் 24.12.2025 வரை)
சாதகங்கள்: பாக்கியஸ்தானத்தில் இருந்த புதன் வார இறுதியில் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். அங்கே சூரியனோடு இணைந்து புத ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகின்றார். இதனால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சிலர் தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவார்கள். பெற்றோர்கள் ஒத்துழைப்பார்கள். பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். வேலையில் புதுமைகளைச் செய்து மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களுக்கு புதிய மாற்றங்களால் நல்ல பெயர் கிடைக்கும். அரசுத் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் பத்தாம் இடத்தில் பலமாக இருப்பதால், எதையும் தைரியமாகச் செய்வீர்கள்.
கவனம் தேவை: ராசிநாதன் குரு நான்காம் இடத்தில் வக்ரமாக அமர்ந்திருப்பதால், உங்களுடைய எண்ணங்களே உங்களுக்குத் தடையாக இருக்கும். தாமதத்தைப் பொறுத்துக் கொண்டு மாற்று வழியில் முயற்சிக்க வேண்டும். விரய ஸ்தானத்தில் ராகு இருப்பதை கவனத்தில் கொண்டு காசு பணம் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சனிபகவான் ஜென்மத்திற்கு (ஜென்ம ராசி) நெருக்கமாக இருப்பதால் உடல் நலனில் மிகுந்த கவனம் தேவை.
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்குங்கள். பிற தோஷங்கள் விலகும்.
