டிஷா கொலை குற்றவாளிகள் சடலத்தை பதப்படுத்த போலீசார் முடிவு

திருமலை: தெலங்கானா கால்நடை மருத்துவர் டிஷா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான முகமது ஆரிப், சென்னகேசவ, சிவா,  நவீன் ஆகியோர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் இந்த என்கவுன்டர் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் என்கவுன்டர் வழக்கை விசாரணை செய்வதற்காக உச்ச நீதிமன்றம் சிறப்பு குழுவை அமைத்துள்ளது. இந்த வழக்கில் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடப் பட்டால் அதற்கு தயாராக இருப்பதற்காக 4 சடங்களுக்கும் சிறப்பு 7,500 மதிப்பு ஊசி மரு ந்தை செலுத்தி அவற்றை பாதுகாக்க போலீ சார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: