புதுடெல்லி: மக்களவையில் உறுப்பினர்களாக உள்ள எம்பிக்கள் சார்ந்த கட்சிகளின் தலைவர்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், நாடாளுமன்றத்தின் கண்ணியம், கவுரவத்தை குறைக்கும் வகையில், நாடாளுமன்ற வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சில உறுப்பினர்கள் நடந்து கொள்கின்றனர். அவைக்குள் பதாகைகள், போஸ்டர்களை காட்டுவது, அவர்கள் பயன்படுத்தப்படும் மொழி, மற்றும் நடத்தை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
