ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 20 தொகுதிகளில் இன்று 2ம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் 5 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டத் தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடந்தது. இன்று 20 தொகுதிகளில் 2ம் கட்ட தேர்தல் நடக்கிறது. இதில், 260 வேட்பாளர்களின் தலைவிதியை, 47 லட்சத்து 24 ஆயிரத்து 968 வாக்காளர்கள் தீர்மானிக்கின்றனர். ஜாம்ஷெட்பூர் கிழக்கு மற்றும் மேற்கு தொகுதியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை தேர்தல் நடக்கிறது. மற்ற 18 தொகுதிகளில் மாலை 3 மணி வரை தேர்தல் நடைபெறும்.