மதுரை: முக்கிய குற்ற வழக்குகளின் விசாரணையை கட்டாயம் வீடியோ-ஆடியோ பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றங்களுக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு 3 மாதத்திற்குள் செய்து தர வேண்டும் எனவும் உத்தரவு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறுவதை தடுக்கும் வகையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு 10 ஆண்டுகளுககு மேல் தண்டனை அளிக்க கூடிய முக்கிய வழக்கு விசாரணையை வீடியோ, ஆடியோ பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களில் கட்டாயம் வீடியோ, ஆடியோ பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகளிர் நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணையையும் வீடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு உத்தரவிட்டுள்ளது.