ஸ்ரீநகர்: காஷ்மீரில் நேற்று மாலை பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். மேலும் 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புல்வாமா மாவட்டத்தின் டிராப்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இந்நிலையில் அனந்தநாக் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் சிக்கின. இந்நிலையில் பாரமுல்லா மாவட்டத்தில் கையெறி குண்டுகளுடன் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதத்தில் நின்று கொண்டிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.