திருவனந்தபுரம்: குருவாயூர் கோயில் உண்டியலில் துப்பாக்கி குண்டு கிடந்ததால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர். கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோயில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயிலுக்கு உலகமுழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். ஏற்கனவே இந்த கோயிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலை சுற்றிலும் பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு அருகிலும் உண்டியல்கள் உள்ளன. கோயில் அருகில் உள்ள உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படும்.