புதுடெல்லி: ‘தகவல் உரிமை சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் வருவார்,’ என டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று அளிக்கிறது. ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் வருவார்,’ என கடந்த 2010, ஜனவரி 10ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், ‘நீதித்துறை சுதந்திரம் என்பது ஒரு போதும் நீதிபதியின் தனியுரிமையை பாதிக்காது,’ என்று கூறப்பட்டது. இந்த தீர்ப்புக்கு அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பால கிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.