சென்னை: தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்வது தற்போது குறைந்துள்ள நிலையில், வெப்ப சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று ஆலங்குடியில் 60மிமீ மழை பதிவாகியுள்ளது. ராசிபுரம் 50மிமீ, வால்பாறை 30மிமீ மழை பெய்துள்ளது.