இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நல்ல மழை பொழிவால் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் நீர் தேங்கி இருந்த நிலையில், விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் போன்றோர் மண் எடுத்து பயன்பெற்றிட இயலாத சூழ்நிலை இருந்தது. தற்போது இணைய வழியில் விண்ணப்பம் செய்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அளவிலேயே அனுமதி எளிதில் பெறலாம் என்று அறிவித்த முதல்வருக்கு மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.
The post கண்மாய், குளம், ஏரிகளில் களிமண் எடுக்க அனுமதி: முதல்வருக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் நன்றி appeared first on Dinakaran.