(18.12.2025 முதல் 24.12.2025 வரை)
சாதகங்கள்: ஐந்துக்கு உரிய சூரியன் பாக்கியஸ்தானத்தில் செவ்வாயோடு இணைந்திருப்பதும், வாரத்தின் பிற்பகுதியில் சுக்கிரனும் புதனும்கூட 9ம் இடத்தில் இணைய இருப்பதும், பாக்கியஸ்தானம் வலுப்பெறுவதைக் காட்டுகிறது. நாம் நினைப்பது நடக்க வாய்ப்புகள் உருவாகும். இதுவரை நாலாம் இடத்திலிருந்த குரு மிதுனத்துக்கு திரும்புகிறார். அவருடைய பார்வையும் பாக்கியஸ்தானத்தில் படுவதால், வெளியூர் பயணங்கள் வெளிநாட்டு வேலை போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். இவ்வாரம் இனிய வாரமாக அமையும்.
கவனம்தேவை: ஐந்தாம் இடமாகிய புத்திர ஸ்தானத்தில் கேது அமர்ந்திருக்கிறார். வாக்குவாதங்கள் ஏற்படலாம். சில முக்கிய நபர்களுடன் விரோதம் ஏற்பட்டு, அமைதி குறையலாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 17.12.2025 காலை 10.26 முதல் 19.12.2025 இரவு 10.51 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதும், முருகப் பெருமானை வணங்குவதும் நல்லது.
