பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த சமத்தூர் பொன்னாச்சியூரை சேர்ந்தவர் அருள்குமார்(28). இவர் கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதியன்று, சத்தியமங்கலம் ரோட்டில் ஆம்னி வேனில் செல்லும்போது, கரியாம்பாளையம் அருகே எதிரே வந்த அரசு பஸ் ஒன்று, வேனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அருள்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து, இறந்த அருள்குமாரின் பெற்றோர், பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்தில் நஷ்ட ஈடுகேட்டு வழக்கு தொடர்ந்தனர். பின் 2017ம் ஆண்டு இந்த வழக்கின் தீர்ப்பில், இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தொகையாக ரூ.9லட்சத்து 2600வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.