அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரை சந்தித்து அரியானா தமிழ்ச்சங்க நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்- ஐ சந்தித்து, அரியானா தமிழ் சங்க நிர்வாகிகள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். குருகிராம் மற்றும் சண்டிகர் தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் தமிழர்கள் சார்பாக தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டனர்.